
ஸ்ரீலங்காவில் நடைபெற்ற யுத்தம் தமிழ் குடும்பத்தினருக்கு எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது என்பதனை நாமறிவோம். மிகப் பயங்கரமான அனுபவம். அதற்காக நான் மனம் வருந்துவதோடு எனது அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றேன். யுத்தத்தினால் பாதிப்படைந்த தமிழ் கிராமங்களை மீளக் கட்டி எழுப்புவதில் சர்வதேச வைத்திய சுகாதார நிறுவனம் முக்கிய பங்ககளிப்பினை செய்து வருகின்றமை சிறந்த சேவையாகும். விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்களையும், வேலை வாய்ப் பின்றி இருக்கும் ஆண்களுக்கு ஓட்டோ றிக்சோக்களையும் வழங்கி அவர்களுக்கு வாழ் வாதாரத்தினை வழங்கி வருவது பாராட்டுக்குரியது”.
மார்க்கம் ஜஸ்மின் ஹோல் மண்டபத்தில் நேற்று மாலை ஆரம்பமாகிய சர்வதேச வைத்திய சுகாதார நிறுவனத்தின் (IMHO.) ஒன்பதாவது வருடாந்த இரு நாள் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஒன்ராறியோ மாகாண அமைச்சர் எரிக் ஹொஸ்கின் இவ்வாறு கூறினார். இம்மாநாட்டிற்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளிலுள்ள ஐ.எம். எச்.ஓ. உறுப்பினர்களான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
மேற்படி அமைப்பின் ஆரம்ப காலத் தலைவாரான டாக்டர் லம்போதரன் வரவேற்புரை நிகழ்த்தி னார். கனடா வர்த்தக சம்மேளனத் தலைவர் திரு. மயில்வாகனம் அகிலன் உரை யாற்றுகையில் வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தமது கடும் முயற்சியி னால் முன்னேறியுள்ள னர். அவர்களது உதவியுடன் ஐ.எம.எச்.ஓ. இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கும் நோயாளிகளு க்கும் பெரும் சேவை ஆற்றி வருகின்றது. அதற்கு நாமும் எம்மாலியன்றளவு ஆதரவு வழங்கி வருகின்றோம். தொடர்ந்தும் ஆதரவளிப்போம் எனக் கூறினார்.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் பணியாற்றும் டாக்கடர் ஏ.பார்த்திபன் உரையாற்று கையில் நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதாகவும் ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வைத்தியசாலையில் போதிய இடவசதியோ, உப கரணங்களோ, வாகனங்களோ இல்லை. 418 மார்பு புற்று நோயாளிகள் உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒளிக்கதிர் சிகிச்சை உபகரணம் இல்லை எனக் கூறினார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வந்த டாக்டர் சிவயோகம் உரையாற்றிய போது யாழ்ப்பாண மக்கள் தங்கள் சுய அடையாளத்தையும் நம்பிக்கையையும் இழந்து விரக்தியோடு வாழ்கின்றனர். தமது குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்து வந்தோரும் இன்று மௌனித்து விட்டார்கள். யாழ் மக்களுக்கு உதவுவதில் ஐ.எம்.எச்.ஓ ஆற்றி வரும் சேவை மகத்தானது எனக் கூறினார். மற்றும் பல டாக்டர்களும் உரையாற்றினார்கள்
