
“ உயிர் சக்தியை இந்து மதம் ஆன்மா என சுட்டுகின்றது. அது அருட்சக்தியாக எங்குமே வியாபித்திருக்கிறது. அதனை Electro Magnetic Energy என விஞ்ஞானம் கூறுகின்றது. எமக்கு வேண்டிய சக்தியைத் தருவது சூரியன். மனிதன் ஞானத்தை அடைய சக்தி உலகெங்கும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஞான தியானங்களை அழிக்கும் சக்தி சூரியனுக்கு உண்டு. நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கு செல்வேன்? என்பவற்றை அறிவதே ஞானம். “தத்” என்பது அது. “து” என்பது நீ. இரண்டும் இணைந்ததே தத்துவம். ஞானம் பழைய நிலையிலேயே இருந்தால் எதுவித பலனும் ஏற்படாது. அதற்கு அகமாற்றம் தேவை. அகமாற்றம் ஏற்பட்டு விட்டால் ஞானம் பெறுவதை தவிர்க்க முடியாது. அக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டே எனது முதலாவது சிஷ்யையான திருமதி விஜயா ராமன் “அகமாற்றம் தேவை” என்ற நூலினை எழுதி வெளியிடுகின்றார். அவர் தமிழறிவும்> சமய அறிவும் நிறைந்தவர்”;.
நேற்று மாலை ஸ்காபுறோ “சென்ரனியல் றிகிறியேசன் சென்ரர்” மண்டபத்தில் நிகழ்ந்த திருமதி விஜயா ராமனின் “அகமாற்றம் தேவை” என்ற ஆன்மீக நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கிய கனடா யோக வேதாந்த நிறுவனத்தைச் சேர்ந்த சுவாமி பரமாத்மானந்தா இவ்வாறு கூறினார். சோமாஸ்கந்த சிவாச்சாரியார் விழாவிற்கு சமூகமளிக்க முடியாமற் போனதினால் அவரது ஆசிச் செய்தி வாசிக்கப்பட்டது.
விழாவிற்கு தலைமை தாங்கிய டாக்டர் கௌசல்யா சுப்பிரமணியன் தலைமை உரை நிகழ்த்திய போது “ஆன்மீகம் என்றால் ஆண்டவனை துதிப்பது மாத்திரமல்ல ஓர் ஆன்மா மற்றொரு ஆன்மாவை நேசிப்பதும் ஆகும். அந்த ஆன்ம நேயம் பின்னர் மனித நேயமாக மாற்றமடையும். நான் உன்னையும் உலகையும் நேசிக்கின்றேன் என்ற அடிப்படையில் திருமதி விஜயா ராமன் இந்நூலை எழுதியுள்ளார். அவர் வாழ்க்கையின் முக்கிய அம்சமான நின்மதியைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ளார். குற்றமற்ற மனமே மகிழ்ச்சியானது. ஆரோக்கியமாகவும் நின்மதியாகவும் வாழ்வ தற்கு மனதைப் பக்குவப் படுத்துவது எப்படி? அதுவே அகமாற்றம் என விளக்கியுள் ளார் உலகை நேசிக்கும் பண்புள்ள இவர் இது போன்ற மற்றும் பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். எளிய நடையில் எழுதும் ஆற்றல் மிக்க இவரது இந்நூலை அனைவரும் வாசித்து பயனடைய வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
நூலுக்கு ஆய்வுரை வழங்கிய திருமதி புவனா கணேஷ் “இந்நூலின் அட்டைப் படத் தில் தாமரை மொட்டு இருக்கின்றது. இந்நூலினை விரித்துப் படித்தால் மனமானது தாமரை மலர் போன்று மலரும் என்ற அர்த்தத்தினை அது புலப்படுத்துகின்றது. நாம் ஒவ்வொருவரும் அன்புடன் பழகும் போது உலகமே அன்பு மயமாகி விடுகின்றது. நாமனைவரும் அறியாமையினால் போலியான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின் றோம். கணவன்> பிள்ளைகள் யாவும் நமது பூர்வ கர்மத்தினால் வந்தது. ஆனால் ஞானத்தினால் கர்ம வினைகளை அழிக்க முடியும் என விளக்கமாக திருமதி விஜயா ராமன் எழுதியுள்ளார். கிடைத்ததை வைத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைய வேண்டும். ஜோசியரைத் தேடிச் சென்று பரிகாரம் தேடுவதைக் கைவிட்டு உண்மையான ஞான த்தைப் பெற வேண்டும் எனவும் எழுதியுள்ளார். நாம் குழப்பத்தில் இருக்கும் போது மனதுக்கு சாந்தத்தினை ஏற்படுத்தும் நூல்களை படிக்க வேண்டும். அந்த வகையில் இந்நூல் இன்பத்தை ஏற்படுத்தும் நூலாக அமைந்துள்ளது” எனக் கூறினார்.
திருமதி கோதை அமுதனும் ஆய்வுரை வழங்கினார். நூலின் முதற் பிரதியை திரு மதி யோகாம்பாளிடம் இருந்து திருமதி சுசிலா ஹரிகரன் பெற்றுக் கொண்டார். செல் விகளான சுவர்னா> மதுரா ஆனந்தராசா ஆகியோர் கர்நாடக பாடல்களைப் பாடினார்கள்.